“திமுகவினரை வைத்துக்கொண்டு மது ஒழிப்பை பேசும் துணிச்சல்...” - தமிழிசைக்கு திருமாவளவன் பதில்

2 days ago 4

வேலூர்: “கருணாநிதியை வைத்துக் கொண்டே ஈழத்தமிழர் விவகாரத்தை பேசியுள்ளோம். அத்தகைய துணிச்சல் கொண்ட என்னால் திமுகவினரை வைத்துக் கொண்டு மது ஒழிப்பு குறித்து பேச முடியும்,” என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்தார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் வரும் அக்டோபர் 2-ம் தேதி மது ஒழிப்பு மாநாடு நடைபெற உள்ளது. இதுதொடர்பாக வேலூரில் இன்று (செப்.17) மாலை நடைபெற்ற விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மண்டல மகளிர் கலந்தாய்வு கூட்டத்தில் அக்கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் பங்கேற்றார். முன்னதாக, செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது: “மக்கள்தொகை அடிப்படையில் இட ஒதுக்கீட்டை உயர்த்திடவும், அனைத்து சமூக பிரிவினரும் இடஒதுக்கீட்டின் பலனை பெற சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி பதவி உயர்வு, தனியார் துறை ஆகியவற்றில் விகிதாச்சார அடிப்படையில் இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகிறோம்.

Read Entire Article