“திமுக மேனாமினுக்கி கட்சியல்ல” - அமைச்சர் துரைமுருகன் பதிவின் பின்னணி என்ன?

1 day ago 4

சென்னை: திமுகவுக்கு மன உறுதி, கொள்கை பிடிப்பு, தியாக உணர்வுடன் வரும் இளைஞர்களை வரவேற்பதாக அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். திமுகவில் அமைச்சர் உதயநிதியை துணை முதல்வராக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. ஆனால், முடிவெடுக்க வேண்டிய முதல்வர் மு.க.ஸ்டாலின் இதுவரை, அதற்கான எந்த தகவலையும் தெரிவிக்கவில்லை. துரைமுருகன் உள்ளிட்ட மூத்த அமைச்சர்கள் இருக்கும் நிலையில், இளைஞர்களுக்கு வழிவிட வேண்டும் என்று இளைஞரணி நிகழ்ச்சியில், அமைச்சர் உதயநிதியே பேசியிருந்தார். அதன்பின், அமைச்சர் எ.வ.வேலு புத்தக வெளியீட்டுவிழாவில் ரஜினிகாந்த் பேசியதும் திமுக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இளைஞர்கள் வந்தால் வரவேற்பதாக அமைச்சர் துரைமுருகனும் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், திமுகவின் பவள விழா மற்றும் முப்பெரும் விழா நேற்று (செப்.17) சென்னையில் நடைபெற்றது. முன்னதாக முதல்வர் ஸ்டாலின், அமெரிக்கா சென்று வந்ததும் அமைச்சரவையில் மாற்றம் இருக்கும் என்று கூறப்பட்டு வந்ததால், இந்த விழாக்கள் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது. இந்தச் சூழலில், மாநாடு தொடங்குவதற்கு முன்னதாக மாலை 5.17 மணிக்கு அமைச்சர் துரைமுருகன் தனது சமூக வலைதளப் பக்கத்தில் ஒரு வீடியோவை பகிர்ந்தார்.

Read Entire Article