சென்னை: தாம்பரம் ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணி நடைபெறுவதால், இன்று அவ்வழித்தடத்தில் கூடுதலாக 50 பேருந்துகளை இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மாநகர போக்குவரத்து கழக மேலாண் இயக்குநர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தாம்பரம் ரயில் நிலையத்தில் இன்று (செப்.15) காலை 9 முதல் இரவு 7 மணி வரை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், சென்னை கடற்கரை ரயில் நிலையத்திலிருந்து தாம்பரம் செல்லும் ரயில்கள் பல்லாவரம் ரயில் நிலையம் வரை மட்டுமே இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.