தாம்பரம் சானடோரியத்தில் 6 மாதங்களாக இயங்காத நகரும் படிக்கட்டு!

2 hours ago 3

சென்னை மற்றும் புறநகர் பகுதியில் ஜிஎஸ்டி சாலையை கடந்து செல்ல வசதியாக தாம்பரம், சானடோரியம், குரோம்பேட்டை, ஆலந்தூர், பொத்தேரி, மறைமலை நகர் உள்ளிட்ட இடங்களில் நடை மேம்பாலங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இதன் மூலம், பாதசாரிகள் போக்குவரத்து மிகுந்த ஜிஎஸ்டி சாலையின் ஒரு புறத்தில் இருந்து மற்றொரு புறத்துக்கு எளிதாக கடந்து செல்ல முடியும்.நடை மேம்பாலத்தில் ஏறுவதற்காக சாய்வுப் பாதை, படிக்கட்டு, தானியங்கிநகரும் படிக்கட்டு இருக்கும். தாம்பரம், சானடோரியம், குரோம்பேட்டை நடை மேம்பாலங்களில் மூன்று வசதிகளும்உள்ளன. புதிதாக போடப்பட்ட மறைமலைநகர் மற்றும் பொத்தேரி நடை மேம்பாலத்தில் படிக்கட்டுகள் மட்டுமே இருக்கின்றன. ரயில் நிலையங்களிலோ, அல்லது ஜிஎஸ்டி சாலையிலோ உள்ள தானியங்கி நகரும் படிக்கட்டுகள் பழுதானால் சில நாட்களிலோ அதிகபட்சம் ஒரு வாரத்திலோ பழுது பார்க்கப்பட்டுவிடும்.

Read Entire Article