தமிழ்நாடு விளையாட்டுத்துறையில் பல சாதனைகளை படைத்து வருகிறது: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு

1 week ago 10

காரைக்குடி; தமிழ்நாடு விளையாட்டுத்துறையில் பல சாதனைகளை படைத்து வருகிறது என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக காரைக்குடியில் நடைபெற்ற விழாவில் உரையாற்றிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்; வரலாற்றிலேயே முதல்முறையாக தமிழ்நாட்டில் கேலோ இந்தியா போட்டியை நாம் நடத்திக் காட்டினோம். பாரிஸில் நடந்த பாரா ஒலிம்பிக் போட்டியில் தமிழ்நாட்டில் இருந்து 6 வீரர்கள் பங்கேற்றனர். இதில் 4 வீரர்கள் பதக்கம் வென்று தாயகம் திரும்பி இருக்கிறார்கள்.

6 வீரர்களுக்கும் முதலமைச்சர் உயரிய ஊக்கத்தொகை விருதை வழங்க இருக்கிறார். இதில் 38 தங்கம், 21 வெள்ளி, 39 வெண்கலம் என 98 பதக்கங்களை வென்று தமிழ்நாடு இரண்டாவது இடம் பிடித்து சாதனை படைத்தது. இப்படி தமிழ்நாடு விளையாட்டுத்துறையில் பல சாதனைகளை படைத்து வருகிறது. ஒரு திறமையான விளையாட்டு வீரனுக்கு இருக்க வேண்டிய அத்தனை குணங்களும் திறமைகளும் கலைஞர் அவர்களுக்கு இருந்தது. அதனால் தான், யாராலும் எப்போதும் வீழ்த்த முடியாத அரசியல் வீரராக கலைஞர் அவர்கள் இந்தியாவில் உயர்ந்து நிற்கிறார்.

அத்தகைய கலைஞர் அவர்களுடைய பெயரிலான விளையாட்டு உபகரணங்களை பெறக்கூடிய இளைஞர்கள், மாணவர்கள் அந்த திறமைகளையும், குணங்களையும் பெற வேண்டும் என்று கூறினார்.

The post தமிழ்நாடு விளையாட்டுத்துறையில் பல சாதனைகளை படைத்து வருகிறது: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு appeared first on Dinakaran.

Read Entire Article