தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் வெள்ளையன் உடல் நாளை அடக்கம்

1 week ago 11

சென்னை: தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவைத் தலைவர் த.வெள்ளையன் உடல்நலக் குறைவால் நேற்று காலமானார். அவரது உடல், தூத்துக்குடி மாவட்டம் பிச்சிவிளை கிராமத்தில் நாளை அடக்கம் செய்யப்படுகிறது.

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின்பேரவைத் தலைவர் த.வெள்ளையன்(76). நுரையீரல் தொற்று உள்ளிட்ட பிரச்சினைகளுக்காக கடந்த சில ஆண்டுகளாக அவர் சிகிச்சை பெற்றுவந்தார். கடந்த 3-ம் தேதி அவரதுஉடல்நிலை மேலும் பாதிக்கப்பட்டதால், சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நேற்று முன்தினம் அவரது உடல்நிலை மிகவும் கவலைக்கிடமான நிலைக்குச்சென்றது. மருத்துவ குழுவினர் தொடர்ந்து கண்காணித்து சிகிச்சை அளித்து வந்த நிலையில், நேற்று பிற்பகல் 3 மணி அளவில் த.வெள்ளையன் காலமானார்.

Read Entire Article