தமிழகத்தில் வானிலை ரேடார் கண்காணிப்பில் இருந்து ஒரு இடமும் விடுபடாது: மத்திய புவி அமைச்சக செயலர் திட்டவட்டம்

6 days ago 9

சென்னை: அண்மைக் காலமாக தமிழக கடலோர மாவட்டங்கள், முன்பே கணிக்க முடியாத பேரிடரால் அதிகம்பாதிப்புக்குள்ளாகின்றன. ஒவ்வொரு பேரிடரும் தனித்துவமானதாக உள்ளன.

ஒவ்வொன்றை எதிர்கொள்ளும்போதும் முந்தைய படிப்பினைகள் பயனளிப்பதில்லை. கடந்த ஆண்டு தூத்துக்குடியில் வரலாறு காணாத மழை பெய்தபோது, அதை வானிலை மையத்தால் சரியான நேரத்தில் கணித்து எச்சரிக்க முடியவில்லை. இதேபோன்று சென்னையிலும் அவ்வப்போது, வானிலை மையத்தால் கணிக்க முடியாத, எதிர்பாராத மழை பெய்து வெள்ளக்காடாக மாற்றியுள்ளது. இதற்கு போதிய வானிலை கட்டமைப்பும், நவீன உபகரணங்களும் இல்லை என்றுகுற்றஞ்சாட்டப்படுகிறது. தூத்துக்குடி பெருமழையால் பாதிக்கப்பட்டபோது, அதை கணிக்க அப்பகுதி, தமிழகத்தில் உள்ள ரேடார்கண்காணிப்பு எல்லையில் வரவில்லை என்பது தெரியவந்தது.

Read Entire Article