தமிழகத்தில் பிளே ஸ்கூல் விதிமுறைகளை செயல்படுத்த இடைக்கால தடை: உயர் நீதிமன்றம் உத்தரவு

1 day ago 4

மதுரை: தமிழகத்தில் பிளே ஸ்கூல் தொடர்பான 2023-ம் ஆண்டின் விதிமுறைகளை செயல்படுத்த உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.

தமிழ்நாடு பிளே ஸ்கூல் சங்க பொதுச் செயலாளர் கல்வாரி தியாகராஜன், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில் கூறப்பட்டிருப்பதாவது: “தமிழகத்தில் 6000 பிளே ஸ்கூல்கள் உள்ளன. இவற்றில் 1.80 லட்சம் குழந்தைகள் பயில்கின்றனர். 30 ஆயிரம் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அல்லாத பணியாளர்கள் உள்ளனர். பிளே ஸ்கூல்களுக்கு அனுமதி பெறுவது தொடர்பாக தமிழக அரசு 2023-ல் புதிய விதிமுறைகளை வகுத்து அரசாணை பிறப்பித்துள்ளது.

Read Entire Article