மதுரை: தமிழகத்தில் 7 அரசு சட்டக் கல்லூரிகளில் முதல்வர் பணியிடங்கள் காலியாக இருப்பதற்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை கடும் அதிருப்தி தெரிவித்துள்ளது.
மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் சகா, உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில், “தமிழகத்தில் சட்டப் படிப்புகள் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதே நேரத்தில் தமிழகத்தில் உள்ள சட்டக் கல்லூரி மற்றும் சட்டப் பல்கலைக்கழகங்களில் பேராசிரியர்களின் எண்ணிக்கை மிக குறைவாகவே உள்ளது.நெல்லை, மதுரை, ராமநாதபுரம், திருச்சி, தேனி, காரைக்குடி சட்டக் கல்லூரிகளில் குறைந்த எண்ணிக்கையில் மட்டுமே நிரந்தர விரிவுரையாளர்கள் உள்ளனர்.