கும்பகோணம்: தமிழக கோயிலில் இருந்து திருடி விற்கப்பட்ட, ரூ.5 கோடி மதிப்புள்ள கிருஷ்ணர் சிலை கும்பகோணம் சிறப்பு நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டது.
தமிழகத்தில் சோழர் ஆட்சிக் காலத்தில் வடிவமைக்கப்பட்ட கலியுக கல்கி என்ற கலியமர்த்தன கிருஷ்ணர் (குழந்தை கிருஷ்ணர் காலிங்கன் எனப்படும் பாம்பின் மேல் நடனமாடும் நிலையில் உள்ளது) ஐம்பொன் சிலையானது சிலைக் கடத்தல் கும்பலால் திருடப்பட்டு வெளிநாட்டுக்கு கடத்தப்பட்டது. அந்தச் சிலை அமெரிக்காவின் உள்நாட்டு பாதுகாப்பு விசாரணை அமைப்பிடம் இருப்பதைத் தமிழக சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் கடந்த ஆண்டு கண்டறிந்தனர்.