ராமேசுவரம்: இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 35 தமிழக நாட்டுப் படகு மீனவர்களுக்கு தலா 3 மாதம் சிறை தண்டனையும், தலா ரூ.42 லட்சம் அபராதமும், 10 விசைப்படகு மீனவர்களுக்கு 6 மாதம் சிறை தண்டனையும் தலா ரூ.97 லட்சம் அபராதமும் விதித்து புத்தளம் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
ராமேசுவரம் அருகே பாம்பன் மீன்பிடி துறைமுகத்திலிருந்து கடலுக்குச் சென்ற அலெக்ஸ், ரஞ்சன், சார்லஸ், சூசை மார்டின் ஆகியோருக்கு சொந்தமான நான்கு நாட்டுப் படகுகளை கைப்பற்றி அதிலிருந்த 35 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கடந்த ஆகஸ்ட் 8-ம் தேதி கைது செய்தனர். 35 மீனவர்கள் மீதும் எல்லை தாண்டி மீன்பிடித்தல், தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் குற்றபத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு அவர்கள் புத்தளம் மாவட்டம் வாரியாபொல சிறையில் அடைக்கப்பட்டனர்.