மதுரை: தமிழக மீனவர்களை மொட்டையடித்து அவமானப்படுத்திய இலங்கையை மத்திய அரசு கண்டிக்க வேண்டும் என மனிதநேய ஜனநாயகக் கட்சியின் தலைவர் தமீம் அன்சாரி வலியுறுத்தியுள்ளார்.
அவர் மதுரையில் செய்தியாளர்களிடம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) கூறியதாவது: தமிழக முதல்வர் அமெரிக்க சுற்றுப்பயணத்தை வெற்றிகரமாக முடித்து தாயகம் திரும்பியுள்ளார். முதல்வர் மு.க.ஸ்டாலின், ‘ரூ.7,616 கோடி மதிப்பில் 11,516 பேருக்கு வேலையளிக்கும் 19 ஒப்பந்தங்கள் மேற்கொண்டுள்ளார். சென்னையில் ஃபோர்டு கார் தொழிற்சாலை மீண்டும் இயங்க முடிவெடுத்துள்ளது. இதற்காக தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவிக்கிறோம்.