மாமல்லபுரம்: திருக்கழுக்குன்றத்தில் அதிமுக பேரூர் செயலாளர் மற்றும் அவரது உறவினர் தாக்கப்பட்ட சம்பவத்தை கண்டித்து, முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தலைமையில் அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழக அரசு மற்றும் போலீஸாரை கண்டித்து சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்ட அவர்களை போலீஸார் கைது செய்தனர்.
செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுகுன்றம் நகரப்பகுதியில் வசிப்பவர் தினேஷ்குமார். அதிமுகவின் திருக்கழுக்குன்றம் பேரூர் செயலாளராக உள்ளார். இந்நிலையில், இவரது வீட்டின் முன்பு சிலர் அடிக்கடி சிலர் மது அருந்திவிட்டு தகராறில் ஈடுபட்டதாக தெரிகிறது. இது தொடர்பாக, அதிமுக பேரூர் செயலாளர் திருக்கழுக்குன்றம் போலீஸில் புகார் அளித்துள்ளார்.