சென்னை: பணி நிரந்தரம் செய்யக் கோரி பகுதி நேர ஆசிரியர்கள் சென்னையில் நாளை மறுதினம் (செப்டம்பர் 12) உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.
இது குறித்து பகுதி நேர ஆசிரியர் சங்கங்களின் கூட்டுக்குழு ஒருங்கிணைப்பாளர் முருகதாஸ் சென்னையில் இன்று கூறியதுது: "திமுக தேர்தல் அறிக்கையில் பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்வதாக அறிவித்தது. ஆனால், இதுவரை தமிழக அரசு அதற்கான முயற்சி எடுத்ததாக தெரியவில்லை. இது சார்ந்து பலமுறை கோரிக்கை வைத்தும் பலனில்லை. அதனால் தமிழக அரசுக்கு நினைவூட்டும் விதமாக எங்கள் கோரிக்கையை வலியுறுத்தி சென்னையில் வியாழக்கிழமை உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்பட உள்ளது. இதில் தமிழக முழுவதிலும் இருந்து 10 ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்கள் பங்கேற்பார்கள்.