சென்னையில் செப்.17-ல் திமுக முப்பெரும் விழா - சிறப்பு அம்சங்கள் என்னென்ன?

1 week ago 5

சென்னை: திமுக சார்பில், செப்.15ம் தேதி அண்ணா பிறந்த தினம், 17ம் தேதி பெரியார் பிறந்த தினம், மற்றும் திமுக தொடங்கப்பட்ட நாள் ஆகியவற்றை இணைத்து முப்பெரும் விழாவாக செப்.17ம் தேதி ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்நிலையில், திமுக தொடங்கப்பட்டு 75 ஆண்டுகள் நிறைவடைந் துள்ளது. எனவே, வரும் செப்.17-ம் தேதி திமுக பவள விழா மற்றும் முப்பெரும் விழா கொண்டாடப்படுகிறது. தென் சென்னை மாவட்ட திமுக சார்பில், சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் 17ம் தேதி மாலை 5 மணிக்கு நடைபெறும் முப்பெரும் விழாவுக்கான ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. பொதுச்செயலாளர் துரைமுருகன் தலைமையில் நடைபெறும் இவ்விழாவில் பல்வேறு விருதுகளை, ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட விருதாளர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் வழங்குகிறார்.

Read Entire Article