சென்னை: சென்னை மாநகர பகுதியில் தெரு நாய்களின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தெரு நாய்களை பாதுகாப்பதற்கான சட்டங்கள் வலுவாக இருப்பதால், அவற்றை கட்டுப்படுத்த முடியாமல் மாநகராட்சி நிர்வாகம் திணறி வருகிறது.
இந்நிலையில், உலகளாவிய கால்நடை மருத்துவ சேவைகள் நிறுவனம் மூலம் கடந்த சில மாதங்களாக மாநகராட்சி நிர்வாகம் தெருநாய்களை கணக்கெடுத்தது. கணக்கெடுப்பு அறிக்கையை மாநகராட்சி மேயரிடம் உலகளாவிய கால்நடை மருத்துவ சேவைகள் நிறுவன இயக்குநர் கார்லெட் ஆனி ஃபெர்னான்டஸ் நேற்று முன்தினம் வழங்கினார்.