மதுரை: சென்னையில் உள்ள அனைத்து தீர்ப்பாயங்களின் கிளையும் மதுரையில் தொடங்க வேண்டும் என உச்ச நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி மார்க்கண்டேயே கட்ஜூ பேசினார்.
உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் எம்எம்பிஏ வழக்கறிஞர்கள் சங்கத்தின் நிறுவனர்கள் தின விழா நடைபெற்றது. உயர்நீதிமன்ற மதுரை அமர்வு நிர்வாக நீதிபதி ஆர்.சுப்பிரமணியன் தலைமை வகித்தார். எம்எம்பிஏ தலைவர் ஐசக்மோகன்லால் வரவேற்றார். உச்ச நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி மார்க்கண்டேயே கட்ஜு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.