சென்னை மாநகராட்சி பணியாளர்கள் 11,931 பேருக்கு உடல் பரிசோதனை முகாம்: மேயர் பிரியா தொடங்கி வைத்தார்

1 week ago 10

சென்னை: சென்னையில் 11,931 மாநகராட்சி பணியாளர்களுக்கு முழு உடல் பரிசோதனை முகாமை மேயர் பிரியா தொடங்கி வைத்தார். சென்னை மாநகராட்சியின் 2024-25-ம் நிதிநிலை அறிவிப்பில், மாநகராட்சிக்கு உட்பட்ட தூய்மைப் பணியாளர்கள் மற்றும் அனைத்து நிலை பணியாளர்களுக்கும் முழு உடல் பரிசோதனை மாநகராட்சி சார்பாக வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதையொட்டி சென்னை மாநகராட்சி பணியாளர்களுக்கான முழு உடல் பரிசோதனைமுகாம், அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் நேற்று நடைபெற்றது. மாநகராட்சி மேயர் பிரியா தொடங்கிவைத்து முகாமை பார்வையிட்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: மாநகராட்சியின் 4,571 நிரந்தரப் பணியாளர்கள், 7,360 தற்காலிகப் பணியாளர்கள் என மொத்தம் 11,931 பேருக்கு இன்று முதல்கட்டமாக முழு உடல் பரிசோதனை முகாம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

Read Entire Article