தெரு நாய்கள் தொல்லை என்பது நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருப்பது பொதுமக்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது. இவற்றை கட்டுப்படுத்த மாநகராட்சி தரப்பில் இருந்து தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வந்தாலும் கூட நடை பாதைகள், பூங்காக்கள், கடற்கரை பகுதிகள், தெருக்கள் என பல்வேறு இடங்களில் தெரு நாய் தொல்லை தொடர்கிறது.
இந்நிலையில் சென்னை ஆதம்பாக்கம் தலைமை செயலக குடியிருப்பு பகுதி பிரதான சாலையில் தனியாருக்கு சொந்தமான மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி ஒன்றுஇயங்கி வருகிறது. இந்த பள்ளியில், அந்த பகுதியை சுற்றியுள்ள ஏராளமான குழந்தைகள் படித்து வருகின்றனர். இதையொட்டி தினமும் பெற்றோர் தங்களது குழந்தைகளை பள்ளியில் விடுவதற்காகவும், அழைத்து செல்வதற்காகவும் டெலிபோன் காலனி -1,டெலிபோன் காலனி -2 மற்றும் என்.ஜி.ஓ காலனி ஆகிய பகுதிகள் வழியாக சென்று வருவது வழக்கம்.