சென்னை அருகே ரெயிலை கவிழ்க்க சதி?

2 hours ago 4

திருவள்ளூர்,

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி ரெயில் நிலையம் அருகே ரெயில்வே தண்டவாளத்தில் சிக்னல் இணைப்பு பெட்டியின் போல்ட் கழற்றப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அந்த பகுதியில் இன்று அதிகாலை சுமார் 2 மணி நேரத்திற்கு ரெயில் சேவை பாதிக்கப்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ரெயில்வே போலீசார், ரெயிலை கவிழ்க்க நடைபெற்ற சதியா? அல்லது ஊழியர்களின் கவனக்குறைவா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்

முன்னதாக கடந்த 4 நாட்களுக்கு முன்பு வடமாநிலங்களை இணைக்கும் சென்னை - கும்மிடிப்பூண்டி ரெயில் மார்க்கத்தில் புலிக்குளம் அருகே தண்டவாள இணைப்பு கிளிப்புகள் அவிழ்க்கப்பட்டு சிதறி கிடந்தன. தண்டவாள கிளிப்புகள் கழற்றப்பட்டது தொடர்பாக விசாரணை நடைபெற்று வரும் நிலையில் இன்று மற்றொரு சம்பவம் அரங்கேறியுள்ளது.

இந்த இருவேறு சம்பவங்கள் குறித்தும் 2 தனிப்படைகள் அமைத்து கொருக்குப்பேட்டை ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி ரயில் நிலையம் அருகே ரயில்வே தண்டவாளத்தில் சிக்னல் இணைப்பு பெட்டியின் போல்ட் கழற்றப்பட்டதால் பரபரப்புஅதிகாலை 2 மணி நேரம் ரயில்சேவை பாதிப்பு4 நாட்களுக்கு முன் தண்டவாள இணைப்பு கம்பிகள் அவிழ்க்கப்பட்டு சிதறி கிடந்தனவடமாநிலங்களை இணைக்கும் சென்னை -… pic.twitter.com/zXLI0J4zK5

— Thanthi TV (@ThanthiTV) September 21, 2024
Read Entire Article