சிவகாசியில் 8 ஆண்டுகளாக வாடகை கட்டிடத்தில் இயங்கும் ஆதிதிராவிடர் மாணவியர் விடுதி அவலம்

5 days ago 12

சிவகாசி: சிவகாசியில் 8 ஆண்டுகளுக்கு முன் இடிக்கப்பட்ட அரசு ஆதிதிராவிடர் பள்ளி மாணவியர் விடுதி, கல்லூரி மாணவியர் விடுதியாக தரம் உயர்த்தப்பட்ட பின்னரும் வாடகை கட்டிடத்தில் இயங்கி வருவதால், இடநெருக்கடி காரணமாக மாணவிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

சிவகாசி சிறுகுளம் கண்மாய் அருகே இயங்கி வந்த அரசு ஆதி திராவிடர் பள்ளி மாணவியர் விடுதி, கடந்த 2016-ம் ஆண்டு நீர்நிலை புறம்போக்கு ஆக்கிரமிப்பு அகற்றப்பட்ட போது இடித்து அகற்றப்பட்டது. அதன்பின் மாணவியர் விடுதி சிவகாசி சாட்சியாபுரத்தில் உள்ள ஆதிதிராவிடர் மாணவர் விடுதிக்கு மாற்றப்பட்டு, மாணவர் விடுதி வாடகை கட்டிடத்தில் இயங்கி வந்தது. 2023ம் ஆண்டு முதல் ஆதிதிராவிடர் பள்ளி மாணவியர் விடுதி, கல்லூரி மாணவியர் விடுதியாக தரம் உயர்த்தப்பட்டது.

Read Entire Article