சிவகாசி மாநகராட்சியில் ரூ.1.70 கோடி மதிப்பிலான ஊரணி தூர்வாரும் டெண்டரை ரத்து செய்ய கவுன்சிலர்கள் எதிர்ப்பு

1 week ago 9

சிவகாசி: கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தில் ரூ.1.70 கோடி மதிப்பில் பொத்து மரத்து ஊரணி தூர்வாரும் டெண்டரை ரத்து செய்யும் தீர்மானத்துக்கு சிவகாசி மாநகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் தீர்மானம் நிறுத்தி வைக்கப்பட்டது.

சிவகாசி மாநகராட்சி அலுவலகத்தில் மாதாந்திர மாமன்றக் கூட்டம் இன்று (செப்.10) நடைபெற்றது. மேயர் சங்கீதா தலைமை வகித்தார். துணை மேயர் விக்னேஷ் பிரியா, ஆணையர் கிருஷ்ணமூர்த்தி முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் பேசிய திமுக கவுன்சிலர் சசிகலா, “வார்டுகளில் மழைநீர் கால்வாய்கள் தூர்வார வேண்டி உள்ளது. அதற்காக பொக்லைன் இயந்திரங்களைக் கேட்டால் டீசல் இல்லை என்கிறார்கள். இதனால் பணிகள் பாதிக்கப்பட்டு உள்ளது,” என்றார். அதற்கு சுகாதார ஆய்வாளர், “ஒரு வாரமாக டீசல் பில் பிரச்சினை இருந்தது. தற்போது சரி செய்யப்பட்டு விட்டது” என்றார்.

Read Entire Article