சிறைச்சாலைகள் விதிகளுக்கு உட்பட்டே செயல்படுவதாக பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய முடியுமா? - ஐகோர்ட்

1 day ago 3

சென்னை: தமிழகம் முழுவதும் உள்ள சிறைச்சாலைகள் சிறை விதிகளுக்கு உட்பட்டே செயல்படுகிறது என பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய முடியுமா என சிறைத்துறை அதிகாரிகளுக்கு உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

புழல் மத்திய சிறையில் கைதிகளுக்காக செயல்பட்டு வந்த கேண்டீன் கடந்த மார்ச் மாதம் திடீரென மூடப்பட்டுள்ளதால் அத்தியாவசியப் பொருட்கள் வாங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும், எனவே புழல் சிறையில் உள்ள கேண்டீனை மீண்டும் திறக்க உத்தரவிடக் கோரி மதுரையைச் சேர்ந்த விசாரணை கைதியான பக்ரூதின் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது புழல் சிறையில் உள்ள கேண்டீன் திறக்கப்பட்டுள்ளதா அல்லது மூடப்பட்டுள்ளதா என்பது குறித்து அம்பத்தூர் குற்றவியல் நடுவர் நேரில் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

Read Entire Article