சிறுமி திருமணம் தடுத்து நிறுத்தம்

1 week ago 7

 

விருதுநகர், செப்.11: விருதுநகரில் 17 வயது சிறுமிக்கு நடக்க இருந்த திருமணம் தடுத்து நிறுத்தப்பட்டது. விருதுநகர் திருமணம் மண்டபம் ஒன்றில் 18 வயது நிறைவடையாத சிறுமியை 31 வயதுடைய நபர் திருமணம் செய்ய இருப்பதாக 1098 மூலம் தகவல் கிடைத்தது. மாவட்ட சமூக நல அலுவலர் ஷீலா சுந்தரி உத்தரவின் பேரில் விரிவாக்க அலுவலர் பாப்பா, விஏஓ, போலீசார் விரைந்து சென்று திருமணத்தை தடுத்து நிறுத்தினர்.

விசாரணையில் சிறுமிக்கு 17 வயது 5 மாதங்கள் ஆகியிருப்பது சான்றிதழ் மூலம் உறுதியானது. சிறுமிக்கும் மதுரை பாலமேடு பகுதியை சேர்ந்த திருப்பூரில் வேலை செய்யும் 31 வயதான நபருக்கும் திருமணம் நடக்க இருந்தது உறுதியானது. அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் மாப்பிள்ளை, மாப்பிள்ளையின் தாய், தந்தை, சிறுமியின் தாய் ஆகிய 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். சிறுமியை மீட்டு காப்பகத்தில் தங்க வைத்துள்ளனர்.

The post சிறுமி திருமணம் தடுத்து நிறுத்தம் appeared first on Dinakaran.

Read Entire Article