புதுச்சேரி: புதுச்சேரியில் சிறுமி பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில் கைதாகி சிறையில் இருந்த கைதிகளில் ஒருவர் நேற்று சிறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதையடுத்து அவரது உடல் இன்று காலை ஜிப்மர் மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. அது தொடர்பான நடவடிக்கைகள் அனைத்தும் வீடியோவில் பதிவு செய்யப்பட்டன.