அரியலூர், பிப்.27: அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் வட்டம், சிங்கராயபுரம் கிராமத்தில் வரும் 28ஆம் தேதி ஜல்லிகட்டு நடைபெற உள்ளது.
இது தொடர்பாக வௌியிடப்பட்டுள்ள அறிக்கை: ஜல்லிக்கிட்டு தொடர்பாக அரசு வௌியிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி இந்த ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற உள்ளது. மேற்படி ஜல்லிக்கட்டில் கலந்துகொள்ளவுள்ள மாடுபிடி வீரர்கள் https://ariyalur.nic.in என்ற இணையதளம் மூலம் தங்களது பெயர்களை 27.02.2025 தேதி மாலை 05.00 மணி வரை பதிவு செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் கலந்துகொள்ளும் மாடுகளுக்கான பதிவுகளையும் https://ariyalur.nic.in என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜல்லிக்கட்டில் கலந்துகொள்ளும் மாடுகள் ஜல்லிக்கட்டு நடைபெறும் சிங்கராயபுரம் கிராமத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டில் மட்டுமே கலந்துகொள்ள அனுமதியளிக்கப்படும். மேற்படி ஜல்லிக்கட்டில் கலந்துகொள்ளவுள்ள மாட்டின் உரிமையாளர்கள் https://ariyalur.nic.in என்ற இணையதளம் மூலம் தங்களது பெயர்களை 27.02.2025 தேதி மாலை 05.00 மணி முடிய பதிவு செய்துகொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஜல்லிக்கட்டு போட்டியில் கலந்து கொள்ளவுள்ள காளையுடன் ஒரு உரிமையாளர் மற்றும் காளையுடன் நன்கு பழக்கமுள்ள ஒரு உதவியாளர் மட்டுமே அனுமதிக்கப்படுவர். பதிவு செய்தவர்களின் சான்றுகள் சரிபார்க்கப்பட்ட பின் தகுதியான நபர்களுக்கு மட்டுமே டோக்கன் பதிவிறக்கம் செய்ய இயலும். அவ்வாறு டோக்கன் பதிவிறக்கம் செய்த நபர்கள் மட்டுமே ஜல்லிக்கட்டு விளையாட்டில் பங்கேற்க அனுமதிக்கப்படுவர்.
தமிழ்நாடு அரசின் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளின் படி அரியலூர் மாவட்டத்தின் இணையதள விண்ணப்ப பதிவின் அடிப்படையில் தகுதியான நபர்களுக்கு வழங்கப்படும் டோக்கன் பெற்றுள்ள நபர்கள் மட்டுமே பங்கேற்க அனுமதிப்படுவார்கள். வேறு எந்தவிதமான டோக்கன் வைத்துள்ள நபர்கள் எக்காரணம் கொண்டும் அனுமதிக்கப்படமாட்டார்கள் என மாவட்ட ஆட்சித்தலைவர் ரத்தினசாமி வௌியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
The post சிங்கராயபுரம் 28-ம் தேதி ஜல்லிக்கட்டு போட்டி: காளை, வீரர்கள் பதிவு தொடக்கம் appeared first on Dinakaran.