சிகாகோவில் முதலமைச்சர் முன்னிலையில் ரூ.2,666 கோடி மதிப்பீட்டில் ஒப்பந்தங்கள் கையெழுத்து

1 week ago 8
அமெரிக்காவின் சிகாகோவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், 2,666 கோடி ரூபாய் முதலீட்டில் 5,365 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் ஜாபில் மற்றும் ராக்வெல் ஆட்டோமேஷன் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. திருச்சியில் மின்னணு உற்பத்தி நிறுவனம் அமைக்க ஜாபில் நிறுவனத்துடன் 2000 கோடி ரூபாய் மதிப்பீட்டிலும், ஏற்கனவே காஞ்சிபுரத்தில் இயங்கிவரும் ராக்வெல் ஆட்டோமேஷன் நிறுவனத்துடன் 666 கோடி ரூபாய் முதலீட்டில் மின்னணு உற்பத்தி நிறுவன விரிவாக்கத்திற்கும் மற்றும் ஆட்டோடெஸ்க் நிறுவனத்துடன் தமிழ்நாட்டு இளைஞர்களின் திறன்களை மேம்படுத்துவதற்காகவும் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.
Read Entire Article