சென்னை: சட்டவிரோதமாக குட்காவை பதுக்கி வைத்து விற்பனை செய்த வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், பி.வி.ரமணா மற்றும் ஓய்வுபெற்ற காவல்துறை உயரதிகாரிகள் டி.கே.ராஜேந்திரன், ஜார்ஜ் உள்ளிட்டோர் எம்.பி, எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜராகினர்.
அனைவருக்கும் வழங்கும் வகையில் குற்றப்பத்திரிகை நகல் இன்னும் தயாராகவில்லை என சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டதால், வழக்கு விசாரணை செப்.23-ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது.