கொள்ளிடம் ஆற்றில் மூழ்கி உயிரிழந்த 5 இளைஞர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

1 week ago 10

சென்னை: கொள்ளிடம் ஆற்றில் மூழ்கி உயிரிழந்த சென்னையைச் சேர்ந்த 5 இளைஞர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை: சென்னை எழும்பூர், நேருபூங்கா, தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்புப் பகுதியைச் சேர்ந்த 5 இளைஞர்கள், தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி பூண்டி மாதா கோவிலுக்கு சென்றுவிட்டு கடந்த செப்.8ம் தேதி முற்பகல் திருச்சிசெங்கரையூர் கொள்ளிடம் ஆற்றுப் பாலத்தின் கிழக்குப் பகுதியில் குளிப்பதற்காக ஆற்றில் இறங்கியபோது, கிஷோர் (20), கலைவேந்தன் (19), ஆண்டோ (21), பிராங்கிளின் (23), மனோகர் (19) ஆகிய 5 பேரும் எதிர்பாராதவிதமாக நீரில் மூழ்கி உயிரிழந்தனர் என்ற துயரமான செய்தியைக் கேட்டு மிகுந்த வருத்தமும் வேதனையும் அடைந்தேன். அவர்களது பெற்றோர் மற்றும் உறவினர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் வழங்கிட உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு முதல்வர் அறிக்கையில் கூறியுள்ளார்.

 

The post கொள்ளிடம் ஆற்றில் மூழ்கி உயிரிழந்த 5 இளைஞர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு appeared first on Dinakaran.

Read Entire Article