கொலைக்கு பணம் தர வழிப்பறி: 7 பேர் கைது

9 hours ago 4

மதுரை: அவனியாபுரம் அருகே கொலை செய்ய பணம் திரட்டுவதற்காக வழிப்பறியில் ஈடுபட்ட 7 பேர் கைது செய்யப்பட்டனர். குமார், பாலமுருகன், அருண்குமார், ஆரோக்கிய விஜய், ஆகாஷ், அசோக்குமார், முகமது அசன் ஆகியோரை போலீஸ் கைது செய்தது. கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 6 பட்டாக்கத்திகள், வாள் ஆகியவற்றை பறிமுதல் செய்து போலீசார் விசாரணை செய்தனர். கொலை செய்வதற்கு பணம் தேவைப்பட்டதால் 7 பேரும் வழிப்பறியில் ஈடுப்பட்டதாக போலீஸ் விசாரணையில் தகவல் தெரியவந்துள்ளது.

The post கொலைக்கு பணம் தர வழிப்பறி: 7 பேர் கைது appeared first on Dinakaran.

Read Entire Article