நெல்லை, மே 12: பாப்பாக்குடியில் கொலை முயற்சி, அடிதடி வழக்கில் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளியே சென்றவர் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் 6 மாதம் தலைமறைவானார். அவரை போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.
பாப்பாக்குடி அருகேயுள்ள இலந்தைகுளம் வேத கோயில் தெருவை சேர்ந்தவர் பிச்சையா (53). இவரை கடந்த 2018ம் ஆண்டு கொலை முயற்சி, அடிதடி வழக்கில் பாப்பாக்குடி போலீசார் கைது செய்து பாளை சிறையில் அடைத்தனர். இதனையடுத்து ஜாமீனில் வெளியே வந்த பிச்சையா கடந்த 6 மாதமாக வழக்கு தொடர்பாக தென்காசி நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து வந்தார். இதனையறிந்த தென்காசி நீதிமன்றம் விசாரணை நடத்தி பிச்சையாவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு பாப்பாக்குடி போலீசாருக்கு உத்தரவிட்டது. இதன் பேரில் பாப்பாக்குடி போலீசார் வழக்குப்பதிந்து பிச்சையாவை கைது செய்து தென்காசி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
The post கொலை முயற்சி வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவானவர் கைது appeared first on Dinakaran.