“கூட்டணியில் இருப்பதும், வெளியேறுவதும் கட்சியின் சுதந்திரமான முடிவு” - திருமாவளன்

4 days ago 2

திருவாரூர்: “தேர்தல் கூட்டணியில் இருப்பதும், அதிலிருந்து வெளியேறுவதும் ஒரு கட்சியின் சுதந்திரமான முடிவு. கூட்டணி குறித்து முடிவெடுக்கும் சுதந்திரம், கூட்டணிக்கு தலைமை தாங்கும் பெரிய கட்சிகளுக்கும் உள்ளது.” என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார். விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஒருங்கிணைக்கும் 'மது மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு மகளிர் மாநாடு' குறித்து திருவாரூரில் நடைபெற்ற மண்டல சிறப்புச் செயற்குழு கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றி திருமாவளவன் இக்கருத்தினைக் கூறினர்.

ஏற்கெனவே ‘ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு’ என்று திருமாவளவன் பேசிய கருத்து தமிழக அரசியல் களத்தில் பேசுபொருளாகியுள்ளது. கூடவே, கள்ளக்குறிச்சியில் நடக்கவுள்ள, மது மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு மகளிர் மாநாடும் பல்வேறு விவாதங்களை எழுப்பியது. இந்நிலையில், “கூட்டணியில் இருப்பதும், அதிலிருந்து வெளியேறுவதும் கட்சியின் சுதந்திரமான முடிவு. கூட்டணி குறித்து முடிவெடுக்கும் சுதந்திரம், கூட்டணிக்கு தலைமை தாங்கும் பெரிய கட்சிகளுக்கும் உள்ளது” என்று தற்போது திருமவாளவன் பேசியிருப்பதும் கவனம் பெற்றுள்ளது.

Read Entire Article