புதுச்சேரி: குரங்கு அம்மைக்கு சிகிச்சை அளிக்க புதுச்சேரியில் கோரிமேடு மார்பக மருத்துவமனையில் பத்து படுக்கைகள் கொண்ட வார்டு அமைக்கப்பட்டுள்ளது.
குரங்கு அம்மை தடுப்பு வழிமுறைகள், நெறிமுறைகளை வகுப்பது குறித்து சுகாதாரத் துறை இயக்குனர் (பொ) செவ்வேல் தலைமையில் உயர்மட்ட குழு ஆலோசனைக் கூட்டம் புதுவை இந்திரா காந்தி அரசு பொது மருத்துவமனையில் நடந்தது. இதில் சுகாதாரத் துறை அதிகாரிகள், அரசு மார்பு நோய் மருத்துவமனை, இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லூரி, ஜிப்மர் மருத்துவ கல்லூரிகளின் பிரிநிதிகள் கலந்து கொண்டனர்.