கும்பாபிஷேக விழாவில் 3 பெண்களிடம் 7 பவுன் அபேஸ்

3 hours ago 2

குளத்தூர், செப். 20:குளத்தூர் பஜார் வீதியில் உள்ள காளியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா, கடந்த 15ம் தேதி நடந்தது. குளத்தூர் தெற்குதெருவை சேர்ந்த சேது(70), மேற்கு தெருவை சேர்ந்த வேல்தாய்(60), பெத்தம்மாள்(75) ஆகியோர் கோயில் கும்பாபிஷேக விழாவை காண கோயிலில் கூடினர். கும்பாபிஷேகம் முடிந்து சிறிது நேரத்தில் கழுத்தில் இருந்த 7 பவுன் செயின்கள் காணாமல் போனது கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து மூவரும் குளத்தூர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் எஸ்ஐ முத்துராஜா வழக்கு பதிந்து விசாரித்து வருகிறார்.

The post கும்பாபிஷேக விழாவில் 3 பெண்களிடம் 7 பவுன் அபேஸ் appeared first on Dinakaran.

Read Entire Article