குமரியில் கடல் சீற்றத்தால் தொடரும் சம்பவம் - மேலும் ஒரு படகை இழுத்துச் சென்ற அலை!

1 week ago 9

நாகர்கோவில்: கன்னியாகுமரி அருகே இன்று கடல் சீற்றத்தால் 4-வது படகையும் மீனவர்களுடன் கடல் அலை இழுத்துச் சென்றது. நல்லவேளையாக மீனவர்கள் சிக்கல் ஏதுமின்றி உயிர் தப்பினர். தொடர்ச்சியாக அலைகள் படகுகளை இழுத்துச் செல்லும் சம்பங்களால் மீனவர்கள் அச்சமடைந்துள்ளனர்.

கன்னியாகுமரி அருகே கோவளம் கடற்கரையில் கடந்த வாரம் தலா 6 மீனவர்களுடன் மீன்பிடித்துத் திரும்பிய 2 பைபர் படகுகள் கடல் சீற்றத்தில் சிக்கி கவிழ்ந்தன. இதில் இரு படகிலும் இருந்த 12 மீனவர்கள் கடலில் தத்தளித்தனர். அவர்கள் பிடித்து வந்த மீன்கள், வலை மற்றும் மீன்பிடி உபகரணங்கள் அனைத்தும் கடலில் மூழ்கின. பின்னர் கரையில் நின்ற மீனவர்கள் சென்று கடலில் உயிருக்கு போராடிய மீனவர்களை மீட்டு படகுகளையும் கரை சேர்த்தனர்.

Read Entire Article