கிருஷ்ணகிரியில் டிப்பர் லாரி ஓட்டுநரை தாக்கிய தி.மு.க. நிர்வாகியை கைது செய்யக் கோரி போராட்டம்

1 week ago 24
கிருஷ்ணகிரி மாவட்டத்தில், டிப்பர் லாரி டிரைவரை தாக்கிய திமுக நிர்வாகி உள்ளிட்டோரை கைது செய்ய வலியுறுத்தி ஏராளமானோர் ஓசூர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். தங்களது காரை உரசுவது போல் சென்றதாக லாரி டிரைவர் ஒருவரை திமுக நிர்வாகி ராமுவும், அவரது அண்ணன் நாகராஜும் தாக்கி சாவியை பறித்துச்சென்றதாக கூறப்படுகிறது. சாவியை திருப்பி வாங்குவதற்காக சென்ற ஓட்டுநர்கள் மாதையன் மற்றும் சுவாமிநாதன் ஆகியோரையும் தாக்கிய ராமு தரப்பினரை கைது செய்ய வலியுறுத்தி போராட்டம் நடைபெற்றது.
Read Entire Article