சென்னை: கிருஷ்ணகிரி தனியார் பள்ளியில் மாணவிகளுக்கு நடந்த பாலியல் வன்கொடுமை வழக்கை போலீஸார் சரியாக விசாரிக்கவில்லை, என சென்னை உயர் நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.
கிருஷ்ணகிரி தனியார் பள்ளியில் போலியாக என்சிசி முகாம் நடத்தப்பட்டு, மாணவிளுக்கு பாலியல் துன்புறுத்தல் அளிக்கப்பட்ட வழக்கு விசாரணையை சிபிஐ-க்கு மாற்றக்கோரி வழக்கறிஞர் ஏ.பி. சூர்யபிரகாசம் சென்னை உயர் நீதிம்னறத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி டி. கிருஷ்ணகுமார் மற்றும் நீதிபதி பி.பி. பாலாஜி ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.