சென்னை: உயர் நீதிமன்றத்தில் அளித்த உத்தரவாதத்தின்படி கிண்டி ரேஸ் கிளப்புக்கு வைக்கப்பட்ட சீலை அகற்றவில்லை எனக் கூறி உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ளது.
கிண்டி ரேஸ் கிளப்புக்கு குத்தகை வாடகை பாக்கியாக ரூ.730 கோடி செலுத்தவில்லை என்பதால் அதற்கான குத்தகையை ரத்து செய்த தமிழக அரசு, உடனடியாக சுவாதீனம் எடுக்கும் வகையில் ரேஸ் கிளப்புக்கு சீல் வைத்தது. இதை எதிர்த்து ரேஸ் கிளப் நிர்வாகம் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் அவசர வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், குத்தகையை ரத்து செய்த தமிழக அரசு காலி செய்ய அவகாசம் வழங்காமல் சுவாதீனம் எடுத்து சீல் வைத்ததற்கு கண்டனம் தெரிவித்தனர்.