காவல் நிலைய வளாகத்தில் இருந்த பைக்கில் ரூ.10 லட்சம்.. ஒருவரை கைது செய்த போலீசார் விசாரணை..

1 week ago 9
சென்னை நுங்கம்பாக்கம் காவல் நிலைய வளாகத்தில் மர்ம நபர் நிறுத்திச் சென்ற ஸ்கூட்டியில் உரிய ஆவணங்கள் இன்றி இருந்த 10 லட்சம் ரூபாயை பறிமுதல் செய்த போலீசார், அது ஹவாலா பணமா என விசாரணை நடத்தி வருகின்றனர்.  வள்ளுவர்கோட்டம் பகுதியில் அமைந்துள்ள பணம் செலுத்தும் மையம் அருகே நேற்று இரவு பணம் செலுத்தும் போது, இரு நபர்களுக்குள் தகராறு ஏற்பட்டு ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டதாகவும், அதில் ஒருவர் ஸ்கூட்டியை எடுத்துச் சென்று நுங்கம்பாக்கம் காவல் நிலைய வளாகத்தில் யாரிடமும் சொல்லாமல் விட்டுவிட்டு சென்றதாகவும் கூறப்படுகிறது. ஸ்கூட்டியை எடுக்க வந்த ஹமீது என்பவரிடம் விசாரித்து வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர். 
Read Entire Article