கார்- பைக் மோதியதில் பாட்டி, கணவன் பலி: கர்ப்பிணி மனைவி கிணற்றில் குதித்தார்

4 hours ago 1

ஈரோடு: ஈரோடு மாவட்டம் பங்களாபுதூரை அடுத்த புஞ்சை துறையம்பாளையத்தை சேர்ந்த ரவிச்சந்திரன் மகன் நந்தகுமார் (24). திருப்பூர் தனியார் நிதி நிறுவனத்தில் மார்க்கெட்டிங் எக்ஸிகியூட்டிவாக வேலை செய்து வந்தார். இவர் பாட்டி சரஸ்வதியுடன் (62) பைக்கில் பவானியில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றார். பின்னர் அங்கிருந்து பங்களாபுதூருக்கு நேற்று முன்தினம் இரவு வந்து கொண்டிருந்தனர். ஜம்பை கழுங்கு பாலம் அருகே ஆப்பக்கூடல் பகுதியிலிருந்து பவானி நோக்கி வந்த காரும், பைக்கும் நேருக்குநேர் மோதிக் கொண்டன. இதில் தூக்கி வீசப்பட்ட நந்தகுமார், சரஸ்வதி ஆகிய இருவரும் உயிரிழந்தனர்.

கார், கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. நந்தகுமார் திருப்பூரில் வேலைக்கு செல்லும்போது, குன்னத்தூர் அருகே தொரவலூரை சேர்ந்த இலக்கியா (23) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இலக்கியா 4 மாத கர்ப்பிணியாக இருந்தார். பாட்டியுடன் கணவர் விபத்தில் உயிரிழந்தது குறித்து தகவல் அறிந்த இலக்கியா 100 அடி விவசாய கிணற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்றார். அவரை தீயணைப்பு படையினர், இரு கால்கள் மற்றும் கை முறிந்த நிலையில் மீட்டு கோபியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

The post கார்- பைக் மோதியதில் பாட்டி, கணவன் பலி: கர்ப்பிணி மனைவி கிணற்றில் குதித்தார் appeared first on Dinakaran.

Read Entire Article