காசாவில் பள்ளியின் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 22 பேர் பலி

3 hours ago 3

காசா,

காசா முனையில் செயல்பட்டு வரும் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் கடந்த ஆண்டு அக்டோபர் 7ம் தேதி இஸ்ரேலுக்குள் புகுந்து பயங்கரவாத தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 1,139 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். மேலும், இஸ்ரேலில் இருந்து 251 பேரை பணய கைதிகளாக காசாமுனைக்கு ஹமாஸ் கடத்தி சென்றது.

இதையடுத்து ஹமாஸ் ஆயுதக்குழு மீது போர் அறிவித்த இஸ்ரேல் ஒப்பந்த அடிப்படையில் பணய கைதிகள் 105 பேரை மீட்டது. மேலும், அதிரடி மீட்பு நடவடிக்கை மூலம் பணய கைதிகள் 8 பேரை இஸ்ரேல் மீட்டுள்ளது. மேலும் 100-க்கும் மேற்பட்டவர்கள் பணய கைதிகளாக ஹமாஸ் பிடியில் சிக்கியிருப்பதாகவும், அதில் பலர் உயிரிழந்திருக்கலாம் எனவும் இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

இதனிடையே காசா பகுதியில் இஸ்ரேல் ராணுவம் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த போரில் சுமார் 41 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில், காசாவில் உள்ள செய்டவுன் என்ற பகுதியில் உள்ள பள்ளிக்கூடம் மீது இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில் 22 பேர் உயிரிழந்துள்ளதாக காசா சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மேலும் இந்த தாக்குதலில் 30 பேர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து இஸ்ரேல் ராணுவம் வெளியிட்ட அறிக்கையில், "ஒரு பழைய பள்ளிக்கூட வளாகத்திற்குள் செயல்பட்டு ஹமாஸ் அமைப்பினரின் கட்டளை மட்டும் கட்டுப்பாட்டு மையத்தை குறித்து தாக்குதல் நடத்தப்பட்டது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

Read Entire Article