காங்கயம்: காங்கயம் அருகே குடும்ப பிரச்சினை காரணமாக, மாமனாரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுவிட்டு, மருமகன் நெற்றியில் சுட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
திருப்பூர் மாவட்டம் காங்கயம் அடுத்த எல்லப்பாளையத்தை சேர்ந்த விவசாயி பழனிச்சாமி (70). இவரது மகள் அம்பிகாவின் கணவர் ராஜ்குமார் (50). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். படியூரில் குடும்பத்துடன் வசித்த ராஜ்குமார் அங்கு ஹாலோபிளாக் நிறுவனம் நடத்தி வந்தார். கடந்த சில ஆண்டுகளாகவே பழனிச்சாமிக்கும், ராஜ்குமாருக்கும் பிரச்சினை இருந்துவந்தது. இரு குடும்பத்தினரும் பேசிக்கொள்ளாமல் இருந்தனர்.