கல்வராயன் மலைப் பகுதி மக்களுக்கு 4 வாரத்தில் போதிய பேருந்து வசதிகள்: ஐகோர்ட் உத்தரவு

1 hour ago 3

சென்னை: கல்வராயன் மலைப் பகுதி மக்களுக்கு போதிய பேருந்து வசதிகளை 4 வாரங்களில் செய்து கொடுக்க வேண்டும் என உயர் நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

கல்வராயன் மலைப்பகுதி மக்களின் சமூக, பொருளாதார, வாழ்வாதார மேம்பாட்டுக்காக உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கை விசாரித்து வருகிறது. கல்வராயன் மலைப் பகுதிக்கு பேருந்து வசதிகளை செய்து கொடுப்பது குறித்து சேலம் மற்றும் விழுப்புரம் கோட்ட அரசு போக்குவரத்துக்கழக நிர்வாக இயக்குநர்கள் ஆஜராகி விளக்கமளிக்க நீதிபதிகள் ஏற்கெனவே உத்தரவிட்டிருந்தனர். அதன்படி, இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், என்.மாலா ஆகியோர் அடங்கிய அமர்வு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது சேலம் மற்றும் விழுப்புரம் கோட்ட நிர்வாக இயக்குநர்கள் காணொலியில் ஆஜராகி விளக்கமளித்தனர்.

Read Entire Article