கரூர்: தாந்தோணி ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்திற்குள் விநாயகர் கோயில் எனக்கூறப்பட்ட கட்டிடம் பல்வேறு அமைப்புகளின் எதிர்ப்பு காரணமாக இரவோடிரவாக இடித்து அகற்றப்பட்டது.
கரூர் மாநகராட்சிக்குட்பட்ட தாந்தோணிமலையில் தாந்தோணி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அமைந்துள்ளது. இந்த நிலையில் இந்த அலுவலகத்தின் நுழைவு வாயிலின் மேற்குப் பகுதியில் சிறியளவிலான கட்டிடம் ஒன்று 2 நாட்களுக்கு முன் கட்டப்பட்டது. இது விநாயகர் கோயில் எனக்கூறப்பட்ட நிலையில் சாமானிய மக்கள் நலக்கட்சி, திக, பெரியார் உணர்வாளர்கள் உள்ளிட்டோர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து, விநாயகர் கோயில் எனக்கூறப்பட்ட அக்கட்டிடம் இரவோடிரவாக இடித்து அகற்றப்பட்டுள்ளது.