கரும்பு விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத் தொகையாக ரூ.297 கோடி வழங்க அரசாணை: அமைச்சர் ராஜேந்திரன் தகவல்

5 hours ago 2

சென்னை: அமைச்சர் ராஜேந்திரன் வெளியிட்ட அறிக்கை: கரும்புக்கு சிறப்பு ஊக்கத் தொகையாக டன் ஒன்றுக்கு ரூ.349 வழங்கிடும் வகையில், ரூ.297 கோடி நிதியை ஒதுக்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, 2024-25 அரவைப் பருவத்தில், சர்க்கரை ஆலைகளுக்கு கரும்பு வழங்கிய 1.30 லட்சம் கரும்பு விவசாயிகள் பயனடைவார்கள். இந்த சிறப்பு ஊக்கத்தொகை தகுதி வாய்ந்த கரும்பு விவசாயிகளின் வங்கி கணக்கிற்கு நேரடியாக விரைவில் வழங்கிட உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. கடந்த நான்கு ஆண்டுகளில் சிறப்பு ஊக்கத்தொகையாக 4,79,030 கரும்பு விவசாயிகளுக்கு மொத்தம் ரூ.848.16 கோடி வழங்கப்பட்டுள்ளது. கடந்த நான்கு ஆண்டுகளில் 6,09,030 கரும்பு விவசாயிகள் ரூ.1,145.12 கோடி சிறப்பு ஊக்கத்தொகை பெற்று பயனடைய வழிவகை செய்யப்பட்டுள்ளது. கடந்த நான்கு ஆண்டுகளில் மட்டும், வரலாற்றில் முதன்முறையாக சிறப்பு ஊக்கத்தொகை மற்றும் கரும்பு கிரய நிலுவைத் தொகை வழங்க சுமார் 1,945.25 கோடி வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

The post கரும்பு விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத் தொகையாக ரூ.297 கோடி வழங்க அரசாணை: அமைச்சர் ராஜேந்திரன் தகவல் appeared first on Dinakaran.

Read Entire Article