கண்டமனூர் அருகே கிணற்றில் கிடந்த பெண்ணின் அடையாளம் தெரிந்தது

6 days ago 4

வருசநாடு, செப். 14: கண்டமனூர் அருகே மரிக்குண்டு கிராமத்தில் தனியார் தோட்ட பகுதியில் உள்ள பாழடைந்த கிணற்றில் பெண்ணின் உடல் சடலமாக நேற்று முன் தினம் மிதந்து கொண்டிருந்தது. இதை பார்த்த சிலர் கண்டமனூர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் பெண்ணின் உடலை மீட்கும் பணிகளில் ஈடுபட்டனர். கண்டமனூர் தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் போலீசார் பெண்ணின் உடலை கிணற்றிலிருந்து மீட்டனர். இந்நிலையில் சடலமாக மீட்டகப்பட்ட பெண் மரிக்குண்டு கிராமத்தை சேர்ந்த ஜெயக்கொடி மனைவி பவுன்தாய் (60) என்பது தெரியவந்துள்ளது. மேலும் பவுன்தாய் பால் மாடுகள், ஆடுகளை வைத்து பராமரித்து வந்தவர் சிலருக்கு வட்டிக்கு பணமும் கொடுத்துள்ளார். இந்நிலையில் பவுன்தாய் பணம் கொடுக்கல் வாங்கலில் ஏற்பட்ட பிரச்னையில் கொலை செய்யப்பட்டாரா என பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

The post கண்டமனூர் அருகே கிணற்றில் கிடந்த பெண்ணின் அடையாளம் தெரிந்தது appeared first on Dinakaran.

Read Entire Article