கடும் நிதிச்சுமையில் காமராஜர் பல்கலை., - முதல்வருக்கு சு.வெங்கடேசன் எம்.பி கடிதம்

1 day ago 2

மதுரை: கடும் நிதிச்சுமையிலுள்ள மதுரை காமராஜர் பல்கலைக் கழகத்திற்கு கடந்தாண்டு தமிழக அரசின் உயர்கல்வித் துறை ரூ.58 கோடி வழங்கியது. ஆனால் இந்தாண்டு ரூ.8 கோடி மட்டுமே வழங்கியுள்ளது ஏற்புடையதல்ல. எனவே தமிழக முதல்வர் தலையிட்டு காமராஜர் பல்கலைக் கழகத்திற்கு நீதியும், நிதியும் வழங்க வேண்டும் என மதுரை எம்பி-யான சு.வெங்கடேசன் தமிழக முதல்வருக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

இது தொடர்பாக தமிழக முதல்வருக்கு சு.வெங்கடேசன் இன்று அனுப்பியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாவது: “மதுரை காமராஜர் பல்கலைக் கழகம் தமிழகத்தின் 2-வது பெரிய பல்கலைக் கழகம். சீரிய செயல்பாட்டிற்காக 2022ம் ஆண்டு யுஜிசி ஏ++ என்ற உயர் தர சான்றிதழ் வழங்கியுள்ளது. இதன் வரம்பிற்கு உட்பட்ட 117 கல்லூரிகளில் 1,50,000 மாணவர்கள் படிக்கின்றனர். ஆனால் சமீப காலமாக, இப்பல்கலைக் கழகத்தின் கல்வி மற்றும் நிர்வாகச் சூழல், நிதி பற்றாக்குறையால் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.

Read Entire Article