கொடைக்கானல்: ஓணம் பண்டிகை விடுமுறையை முன்னிட்டு கொடைக்கானலுக்கு கேரளா சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து காணப்பட்டது.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலுக்கு தமிழகம் மட்டுமின்றி, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட பிற மாநில சுற்றுலா பயணிகளும் அதிகம் வருகை தருகின்றனர். கேரளாவில் தற்போது ஓணம் பண்டிகையை முன்னிட்டு தொடர் விடுமுறை விடப்பட்டுள்ளது. ஓணம் பண்டிகை விடுமுறையை முன்னிட்டு கேரள மாநில சுற்றுலா பயணிகள் நேற்று கொடைக்கானலுக்கு அதிக எண்ணிக்கையில் வருகை தந்திருந்தனர்.