சென்னை: ஓசூரில் ரூ.100 கோடி முதலீட்டில் ஆர்ஜிபிஎஸ்ஐ நிறுவனத்தின் மின்னணு, டெலிமேடிக்ஸ் உற்பத்தி நிறுவனத்தை அமைக்க சிகாகோவில் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: உற்பத்தி, உள்கட்டமைப்பு வளர்ச்சியில் தனியார் மற்றும் பொதுத்துறை முதலீட்டை அதிக அளவில் ஈர்த்து, தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் தொழில் துறை வளர்ச்சியை அரசு ஏற்படுத்தி வருகிறது.