ஒரே பைக்கில் சென்ற 4 பேர் விபத்தில் பலி.. லாரியை முந்த முயன்ற போது விபரீதம்..!

2 days ago 5
நெல்லை மாவட்டம் தச்சநல்லூர் வடக்கு புறவழிச்சாலையில் டீசல் டேங்கர் லாரியும், இருசக்கர வாகனமும் மோதிக் கொண்டதில் ஒரே பைக்கில் வந்த 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது குறித்து போலீசார் விசாரித்துவருகின்றனர். நெல்லை மாவட்டம் கங்கைகொண்டானை அடுத்த ராஜபதியைச் சேர்ந்த கண்ணன், தனது இருமகள்கள் மற்றும் மாமியாருடன் புறவழிச்சாலையின் இணைப்புச் சாலையில் ஒரே பைக்கில் ஹெல்மெட் அணியாமல் நெல்லையை நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது லாரி ஒன்றை முந்தி செல்ல முயன்ற போது, எதிரே வந்த டீசல் டேங்கர் லாரி பைக் மீது மோதியதாக கூறப்படுகிறது.
Read Entire Article